திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – கட்டிட தொழிலாளி பலி

மே.6

திருப்பூரில் பிரிண்டிங் நிறுவனத்தின் கட்டுமான சுவர் சரிந்து விழுந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் – கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா(வயது40). இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்தக் கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராம்மூர்த்தி(வயது50), பிரவீன்(வயது22) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

நேற்று மதியம் இருவரும் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கட்டடத்தின் ஒரு பகுதியில் இருந்த சுவர் சரிந்து இருவர் மீதும் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்டனர். அதில், படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த பிரவீன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வடக்கு போலீசார், ராமமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *