ஏப்ரல் – 18. திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் மனு கொடுத்தனர். இந்த மாநாடு 24- ம் தேதி நடைபெறவிருக்கிறது .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம், மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள் என்றார்.திருச்சி மாநாட்டிற்குப் பிறகு எடப்பாடி தரப்பினர் தங்களைக் கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

திருச்சி மாநாட்டுக்கு சசிகலாவை மாநாட்டிற்கு அழைப்பதுப் பற்றிய கேள்விக்கு, இதற்கான பதில் உரிய நேரத்தில் தரப்படும் என்று வைத்தியலிங்கம் கூறினார். மேலும் கூட்டணி கட்சிகள் சார்பாக யாரையும் திருச்சி மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்றும் தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்கும் மாநாடாக அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம், தேர்தல் கமிஷன் முடிவை பொறுத்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *