திமுகவினரின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட அனைத்து தகவல்களும் பொதுவெளியில் உள்ளவை.அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

கடந்த வாரம் வெளியிட்ட சொத்துப் பட்டியலை அடுத்து அவருக்கு திமுக நிர்வாகிகள் பலரும் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இதற்கு அண்ணாமலை தெரிவித்து உள்ள பதிலில், யாரையும் புண்படுத்துவதற்காக திமுகவினரின் சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் பொதுமக்களுக்கு திமுகவினரின் ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

இதனிடேயே அண்ணாமலை கடந்த வாரம் வெளியிட்ட தகவலுக்காக நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்து உள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *