தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – உள்துறை செயலாளர் அறிவிப்பு

மே.20

தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜீவ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு புதியதாக டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்தோ திபெத் எல்லை படையின் ஏடிஜிபி ஆக உள்ள ராஜீவ் குமாருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு போலீஸ் பயிற்சி அகாடெமியின் டிஜிபி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபி ஆக இருந்த அபய் குமார் சிங், ஊழல் தடுப்பு பிரிவின் டிஜிபியாகவும், TANGEDCO அமைப்பின் ஏடிஜிபி ஆக இருந்த வன்னிய பெருமாள், அந்த அமைப்பின் டிஜிபியாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், சிவில் சப்ளையஸ் அமைப்பின் ஏடிஜிபி ஆக இருந்த அருண், ஆவடி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.சென்னை மாநகர துணை ஆணையராக இருந்த ஆல்பர்ட் ஜான், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவண கண்காணிப்பாளராக இருந்த ஷ்ரேயா குப்தா, சென்னையில் உள்ள பூக்கடை பகுதியின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு திருநெல்வேலியின் துணை காவல் ஆணையராக இருந்த ஸ்ரீனிவாசன் சென்னை மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஹர்ஷ் சிங், நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜவஹர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சசி மோகன், க்யூ பிரான்ச் சிஐடி அமைப்பின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கமாண்டோ ஃபோர்ஸின் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார், திருச்சி தெற்கு பகுதியின் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பல்லா கிருஷ்ணன், செங்குன்றம் பகுதியின் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான உளவுத்துறையின் கண்காணிப்பாளராக ராஜேந்திரன், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி-II-வின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி-II-வின் கண்காணிப்பாளராக இருந்த சாமிநாதன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சஷங்க் சாய், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடியின் சைபர் செல் பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன், தமிழ்நாடு கமாண்டோ போர்ஸின் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

கடலூரில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கூடுதல் கண்காணிப்பாளரான பொன் கார்த்திக் குமார், சென்னை வடக்கு பிரிவின் பொருளாதார குற்றங்கள் பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வினோத் சாந்தராம், சென்னையில் சிபிசிஐடி பிரிவில் சிறப்பு பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பாண்டியராஜன், மத்திய உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக மற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த ஜெயந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிஐடியில் சிறப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சரவண குமார், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை தெற்கு ஊழல் தடுப்பு பிரிவின் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேஷ் கண்ணன், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கலைச்செல்வன், மாநில குற்ற ஆவண கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். செங்குன்றத்தில் துணை காவல் கணிகாணிப்பாளராக இருந்த மணிவண்ணன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மதுரை தெற்கு சட்ட & ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சாய் பிரணீத், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப், மதுரை தெற்கு சட்ட & ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி தெற்கு பகுதியின் துணை கமிஷனராக இருந்த ஸ்ரீதேவி, சிபிசிஐடியின் சைபர் செல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சைபர் க்ரைம் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த கீதாஞ்சலிக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை பெருநகர சைபர் க்ரைம் பிரிவின் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த விஜேய கார்த்திக் ராஜ், மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தாம்பரத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த காமினி, சென்னையில் சிவில் சப்ளையஸ் பிரிவின் ஐஜிபி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதப்படையின் ஐஜிபி -ஆக இருந்த ராதிகா, அமலாக்கப்பிரிவின் ஐஜிபி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.

சிஐடி சிறப்பு பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த சரவணன், திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான உளவுத்துறையின் கண்காணிப்பாளரின் முழு பொறுப்பையும் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் மாநில மாஸ்டர் கண்ட்ரோல் அறையின் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன், தமிழ்நாடு போலிஸ் அகாடெமியின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருநகர சென்னையில் சட்ட – ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த அன்பு, சிஐடி குற்றப்பிரிவின் ஐஜிபி-ஆக பொறுப்பேற்க உள்ளார். சென்னை தலைமை அலுவகலத்தில் கூடுதல் ஆணையராக இருந்த லோகநாதன், பெருநகர சென்னையில் சட்ட – ஒழுங்கு கூடுதல் ஆணையர் பொறுப்பை வகிப்பார். ஆவடிதலைமை அலுவலகத்தில் கூடுதல் ஆணையராக இருந்த நஜ்முல் ஹூடா, நல்வாழ்வு பிரிவு ஐஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவின் ஐஜிபி ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா, சமூக நலன் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *