தமிழகத்தில் ‘கேலோ’ போட்டிகள் – பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர், உதயநிதி நன்றி

May 28, 2023

‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின்: 2023-ம்ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனதுவேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, ‘கேலோ இந்தியா’போட்டிகளை நடத்த தகுதியான மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதற்காகபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *