தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை – 9 துறைமுகங்களில் 1ம் எண் கூண்டு ஏற்றம்..!

மே.10

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறவுள்ளதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக உருமாறியது. இன்று அது மேலும் வலுவடைந்து, புயலாக மாறவிருககிறது. அதன்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், காரைக்கால் புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று மாலை புயல் உருவாகும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *