தங்கம் விலை குறைய என்ன வழி? தங்க நகை தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

மே.11

தங்கத்திற்கான ஜி.எஸ்.டி மற்றும் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தால், சவரனுக்கு ரூ.5,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதனால், தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 47,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த விலை உயர்வைத் தடுக்க என்ன வழி என்பது குறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் நாள் தோறும் 200 கிலோ அளவிலான தங்க நகை விற்பனை வழக்கமாக நடைபெறும். தொடர் விலை உயர்வின் காரணமாக தற்போது தினசரி விற்பனையானது 80 கிலோவாக சரிந்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கான சீசனிலும், தங்க நகை விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. தினமும் 4 முதல் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைகளுக்கு நகைகள் வாங்க வருகிறார்கள்.

இதனால் ஏற்பட்ட சிரமத்தை சமாளிக்க முடியாமல் நகைக்கடை உரிமையாளர்கள் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10,000 பேர் வேலையை இழந்துள்ளனர்.

இந்த சூழல்நிலையிலிருந்து மீண்டுவர, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகவும், ஜி.எஸ்.டி வரியை 3 லிருந்து 1.5 சதவீதமாகவும் மத்திய அரசு குறைத்தால், ஒரு சவரன் விலை ரூ.5,000 வரை உடனடியாக குறையும். தங்க நகை விற்பனையும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *