ஜி7 உச்சிமாநாடு – உக்ரைன் அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி

மே.20

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி7 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

அரசுமுறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கீனி ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் முதல்கட்டமாக ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜி7 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான நாளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார். அப்போது, அவரை, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *