ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

மே.18

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் , பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கவுள்ளது.

தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் முதலில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுவது வழக்கம்.

உலகப் புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக மக்கள் தன்னெழுச்சியாக மெரினா கடற்கரையில் போராட்டத்தை தொடங்கினர். இதனையடுத்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த மனுக்கள் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரணை நடத்த ஆரம்பித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கவுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *