ஜல்லிக்கட்டு வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு?

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு – இம்மாத இறுதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு?

மே.4

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இம்மாத இறுதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகா மாநிலத்தில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கக் கோரியும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் நிறைவுபெற்று இறுதி விசாரணையும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த அரசியல் சாசன அமர்வில் தலைமையாக இருக்கும், நீதிபதி கே.எம்.ஜோசப் வரும் ஜூன் 16ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். முன்னதாக மே மாதம் 20ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோடை விடுமுறைக்கு முன்பாகவே, அதாவது இம்மாத இறுதிக்குள் ஜல்லிக்கட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *