சேலத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி – 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு, இசைக்கு ஏற்றவாறு தங்களது கட்டுடலை அசைத்து காட்டி பார்வையாளர்களை அசரவைத்தனர்.

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சேலம் 60வது கோட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் அசோக்குமார் செய்திருந்தார்.

இந்த ஆணழகன் போட்டியில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200 ஆணழகன்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்கு 3 லட்சம் மதிப்பிலான பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீனியர் ஆண்கள் பிரிவு, ஜூனியர்,சப் ஜூனியர் உள்ளிட்ட நான்கு பிரிவில் போட்டியில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆணழகன்களும் இசைக்கு ஏற்றவாறு தங்களது தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக உடல் கட்டுகளை வெளிகாட்டி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5000, இரண்டாவது பரிசாக 3000, மூன்றாவது பரிசாக 2000 மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்ற ஆணழகனுக்கு 50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *