விசில் போடு எக்ஸ்பிரஸ் பதிவு தொடக்கம்

சென்னை ஏப்.30ல் சிஎஸ்கே- பஞ்சாப்கிங்ஸ் அணிகள் மோதல் – “விசில் போடு எக்ஸ்பிரஸ்” பதிவு இன்று ஆரம்பம்

சென்னையில் வரும் 30ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியை இலவசமாகக் காண குமரி முதல் சென்னை வரை இயக்கப்படும் விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் வரும் 30-ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியை இலவசமாக காண குமரி முதல் சென்னை வரை மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது. இதில், குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் பயணிக்க ஆர்வமுள்ள இளைஞர்கள், இன்று முதல் www.chennaisuperkings.com/wgistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *