கேரளாவில் சொகுசு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – 22 பேர் பலி

மே.8

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணிகளுன் சுற்றுலா படகு சென்றது. நேற்று மாலை 7 மணியளவில் இந்த படகானது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான படகில் 30 பேர் சென்றதாக கூறப்படும் நிலையில், விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாக உயிரிழந்தனர்.

படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

முறையான அனுமதி பெறாமல் சுற்றுலாப் படகை இயக்கியிருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. கேரளாவில் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *