கட்சி மேலிடத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்க தயார் – டி.கே.சிவகுமார்

May 15,2023

இன்று தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கர்நாடகவில் முதலமைச்சர் பதவி யாருக்கு வழங்குவது என்பது குறித்து, கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதை முழு மனதோடு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துளளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சியே, 135 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிவுகிறது. நேற்று இரு தலைவர்களின் வீடுகளின் முன்பு அவர்களுடைய ஆதரவாளர்கள், அடுத்த முதலமைச்சர் என குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவர் முதலமைச்சர் வேட்பாளராக ஆக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இறுதியாக கர்நாடக முதலமைச்சர் தேர்வு குறித்த இறுதி முடிவை கட்சி மேலிடம் முடிவு செய்யும் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சித்தராமையா காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்து பேச உள்ளார். அதற்காக இன்னும் சற்று நேரத்தில் கர்நாடகாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி விரைகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார், பெங்களூரில் உள்ள சங்கரிலா நட்சத்திர விடுதிக்கு வருகை தந்தார். தொண்டர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் டெல்லி செல்வேனா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று என் பிறந்தநாள் என்பதால் என் வீட்டில் சின்ன சின்ன சடங்குகள் உள்ளது. இதனையடுத்து நான் கோவிலுக்குச் சென்று அங்கு கடவுளின் ஆசீர்வாதத்தை பெற உள்ளேன். இன்று “கட்சி மேலிடம் எனக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கிறார்களோ இல்லையோ, நான் செய்ய வேண்டிய வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளேன் . புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களிடம் கட்சி மூத்த தலைவர்கள் கருத்து கேட்டுள்ளனர். மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *