ஒரு பைசா ஊழலை நிரூபித்தால்கூட என்னைத் தூக்கிலிடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் சவால்

மே.6

நான் ஒரு பைசா ஊழல் செய்துள்ளதாக நிரூபித்துவிட்டால்கூட என்னை பகிரங்கமாகத் தூக்கிலிடுங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், என் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எல்லாவற்றையும் ஏவுகிறார்கள். ‘கெஜ்ரிவால் ஒரு திருடன், அவனும் ஊழலில் ஈடுபட்டுள்ளான்’ என்று எப்படியாகவது நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். பிரதமர் மோடிக்கு சொல்லிக் கொள்கிறேன். நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால்கூட என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *