ஏப்ரல்.2023ல் ஜிஎஸ்டி வரி வசூல்ரூ.1,87,035 கோடி – மத்திய அரசு அறிவிப்பு

மே.2

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான தொகையைவிட 12 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவசூல், முதல் முறையாக ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மொத்தம் 9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11% அதிகம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, ஏப்ரல் 20ந் தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி செலுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு (இதே தேதியில்) அதிகபட்சமாக ஒரு நாள் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 57,846 கோடியாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டியில், சிஜிஎஸ்டி மூலம் ரூ. 38,440 கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ. 47,412 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ. 89,158 கோடியும், செஸ் வரி மூலம் ரூ. 34,972 கோடியும் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ரூ.11,559 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19 சதவீதம் அதிகம். இதேபோல், புதுச்சேரியில், ரூ.218 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *