ஈ.பி.எஸ் – அமித்ஷா டெல்லியில் இன்று சந்திப்பு.. அதிமுக – பாஜக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி?

ஏப்ரல்.26

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திக்கவுள்ளார்.

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. புலிகேசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் வேட்பாளர் வேட்புமனுவைத் திரும்பப்பெற்றார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, வேட்பாளரை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில, அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். சென்னையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார். வாய்ப்பும், நேரம் கிடைத்தால் பிரதமர் மோடியையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் இருந்து வந்தாலும், தேசிய அளவிலான பாஜகவுடன், அதிமுகவுக்கு உள்ள உறவு தற்போதுவரை சமூகமாகவே இருக்கிறது. இந்நிலையில், அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் இன்றைய சந்திப்பு நாடாளுமன்ற கூட்டணியை உறுதிப்படுத்துவதோடு, மாநில அளவிலான பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *