இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் – இன்று காலை விண்ணில் பாய்கிறது..!

மே.29

போக்குவரத்தை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளை சுமந்தபடி இன்று காலை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

இந்தியாவின் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளானது, புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது.

இந்தி நேரடிப்பட்டி இன்று காலை 10.42 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட்டி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.
மூன்று நிலைகளை கொண்ட இந்த ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் பணிகளாக, ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *