ஆதிச்சநல்லூரில் நெல்லை பயிற்சி உதவி ஆட்சியர் ஆய்வு – அகழ்வாராய்ச்சி குறித்து தொல்லியல் துறை விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நெல்லை மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, அகழ்வாய்ப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பண்டைய தமிழர்களின் நாகரீகத்தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்க அணிகலன்கள், வெண்கல பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும்,ஆதிச்சநல்லூர் அருகே திருக்கோளூரில் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நெல்லை உதவி ஆட்சியர் (பயிற்சி) கோகுல் நேற்று ஆதிச்சநல்லூருக்கு வருகைதந்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவருக்கு, அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் குறித்து தொல்லியல் துறையினர் விளக்கம் அளித்தனர். பின்னர் திருக்கோளூருக்கு சென்ற உதவி ஆட்சியருக்கு அங்கு நடைபெறும் அகழாய்வு பணிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *