ஆண், பெண்ணுக்கு ஒரே திருமண வயது – மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

ஏப்ரல் 18

“ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயதில் வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, இப்படியான வயது வேறுபாட்டிற்கு பின் அறிவியல்பூர்வ காரணிகள் ஏதுமில்லை, இது பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மையைக் காட்டுகிறது.’’

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதினை கொண்டு வர வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கிற்கு முன்பாக, அஷ்வினி உபாத்யாய் என்பவர் தொடுத்த வழக்கில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயதில் வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், இப்படியான வயது வேறுபாட்டிற்கு பின் அறிவியல்பூர்வ காரணிகள் ஏதுமில்லை என்றும், இது பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மையைக் காட்டுகிறது என்றும் வாதிடப்பட்டு இருந்தது. இவ்வழக்கு கடந்த 20.02.2023 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போதைய வழக்கில் இதனைச் சுட்டிக்காட்டிய இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ’இவ்வழக்கின் பேசுபொருள் பாராளுமன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. திருமண வயது குறித்த சட்டம் நீக்கப்படுமானால், நாட்டின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதே இல்லாமல் போய்விடும்’ என்றார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான திருமண வயது பரிந்துரைக்கப்படுவதில், சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மை இவ்வழக்கில் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

இதற்கு முன்பே அஷ்வினிகுமார் உபாத்யாய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை முன் வைத்து, இவ்வழக்கும் தள்ளுபடி செய்யப்படுவதாக, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜே.பி. பர்டிவாலா ஆகியோர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *