அமெரிக்கா நரகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது – கைது குறித்து டிரம்ப் பேச்சு

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது உட்பட தன் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டொனால்டு டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கிரிமினல் வழக்கில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது கைது பற்றி டொனால்டு டிரம்ப் கூறுகையில், “அமெரிக்காவில் எனக்கு இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. வழக்கில், குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நான் நிரபராதி. நம் நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான் என கூறினார். மேலும் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது உட்பட தன் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *