மாதுரி தீட்சித் உதட்டைக் கடித்துக் குதறிய இந்தி நடிகர்

பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித்.ஒரு படத்தில் நடித்த போது, அதன் ஹீரோ தனது உதட்டில் கடித்த சம்பவத்தை அவர் இப்போது நினைவு கூர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் –சரண்யா ஜோடியாக நடிக்க மணிரத்னம் இயக்கிய படம் ‘நாயகன்’.1987 ஆம் ஆண்டு இந்தப்படம் வெளியானது. இதன் இந்தி ரீமேக்கான ‘தயாவான்’ படம் 1988ல் ரிலீசானது.

இதில் கமல்ஹாசன் வேடத்தில் வினோத் கன்னாவும் சரண்யா வேடத்தில் மாதுரி தீட்சித்தும் நடித்தனர். படத்தை தயாரித்து, இயக்கியவர் நடிகர் பெரோஸ் கான்.

தமிழில் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என்ற பாடல் காட்சியை போல் இந்தியிலும் ஒரு பாடலை படமாக்கினார் பெரோஸ் கான்.
காட்சிப்படி வினோத் கன்னாவும் மாதுரியும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போது வினோத் கன்னா அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

இயக்குனர் ‘கட்’ சொன்ன பிறகும் மாதுரியுடன் நெருக்கமாக நடித்து, அவரது உதட்டை பலமாக கடித்திருக்கிறார்.
மாதுரி உதட்டில் இருந்து ரத்தம் கொட்டியது.
அலறி துடித்தார்.‘ஷாட்’ முடிந்ததும் கண்ணீர் விட்ட படி அங்கிருந்து ஓடினார், மாதுரி தீட்சித்.

இந்த காட்சியை படத்திலிருந்து நீக்க கோரி பொரோஸ் கானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் மாதுரி தீட்சித். ஆனால் நீக்க மறுத்து விட்டார், பெரோஸ் கான். அதற்கு பதிலாக பேசிய சம்பளத்தில் இருந்து பல மடங்கு தொகை கொடுத்து பிரச்சினையை முடித்தார்.

இந்தி ‘நாயகன்’படத்தில் நடிக்க மாதுரிக்கு சம்பளமாக 15 லட்சம் ரூபாய் பேசப்பட்டிருந்தது.

ஆனால் பெரோஸ்கான், ரூ.1 கோடியை வீசி எறிந்துள்ளார்.
மாதுரி தீட்சித் ‘கப்சிப்’ ஆகி விட்டார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *