பெருமாளை கிண்டல் செய்தாரா சந்தானம் ?

பெருமாளை கிண்டல் செய்யவில்லை என்கிறார் சந்தானம்!

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை மறு நாள் வெளியாகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் கூறியதாவது:
இது ,ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாம் இதில் இருக்கிறது. இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ்த் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று சொல்வேன். அவர் பண்ணும் கதை பல லேயர்களை கொண்டிருக்கும். இந்த படத்தையும் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார்’என்று சொன்ன.அவரிடம்,ஒரு பாடலில் பெருமாளைக் கிண்டல் செய்ததாக எழுந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு ‘நான் பெருமாள் பக்தன். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது-பெருமாளை எனக்குப் பிடிக்கும்’என்று சந்தானம் பதில் அளித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *