தக்லைப் மற்றும் ஒரு விக்ரம். பெரிய வெற்றிப் பெற்ற விக்ரம் படத்தின் காட்சிகளை தக்லைப் காட்சிகள் நினைவுப் படுத்துவது போன்று உள்ளது. எந்த நியாயங்களுக்கும் கட்டுப்படாத இரண்டு தாதா குழுக்களின் மோதலோடு படம் ஆரம்பமாகிறது, படம் முழுவதும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
கமல் நடிப்பு சில இடங்களில் மிரட்டலாக உள்ளது. சிம்புவுக்கு இந்தப் படம் திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். நாசர், ஜோஜு ஜார்ஜ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். திரிஷாவும் அபிராமியும் சிறப்பான வேடங்களை செய்து உள்ளனர்.
மணிரத்தினம் படம் என்பதால் வசனம் குறைவுதான். இருட்டான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தூக்கலாக உள்ளன.
அந்த பனி மலை காட்சிக்களுக்காக ஒளிப்திவாளர் ரவி கே.சந்திரனுக்கு விருது கொடுக்கலாம்.
இன்னொருவர் கமலுக்கு மேக்கப் போட்டவர். விரல்களால் அவர் கமலை செதுக்கி இருக்கிறார்.
கடுமையான உழைப்பைக் கொடுத்து உள்ள மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணி நாயகன் போன்று படத்தை செதுக்கவில்லை
••••