ராஜேந்தர் படத்தில் நடிக்க ரஜினி மறுத்தது ஏன் ?

தான் இயக்கிய படங்களில் கவுரவ வேடங்ளில் தலை காட்டி வந்த டி.ராஜேந்தர், ரஜினிகாந்த் மறுத்ததால் தானே ஹீரோவாக நடிக்க நேர்ந்தது. அது என்ன படம் ?
தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
இந்த படத்தை இயக்கியது இவர் தான். ஆனால் தயாரிப்பாளரே, இயக்குநர் என்று தன் பெயரை போட்டுக்கொண்டார்.

இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், 1983-ம் ஆண்டு தான் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
அந்த படத்தில், அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்படுகிறது.

அந்த கேரக்டரில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கவே ராஜேந்தர் விரும்பினார்.
இந்த படத்தின் கதையை எழுதிய டி.ராஜேந்தர், படத்தில் வரும் ஜெயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க ரஜினிகாந்த்திடம் கேட்டுள்ளார்.
அப்போது ரஜினி ,அந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவிக்காத நிலையில், ராஜேந்தரே ஜெயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க நேர்ந்தது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *