ராஜமவுலி படத்தில் நடிக்க நானே பட்கர் மறுப்பு.

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் ,ரஜினியுடன் ‘காலா’, பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் அதிகமான படங்களில் நடிப்பதில்லை. கதையும், அதில் தனது கேரக்டரும் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பது இவரது வழக்கம்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில், மகேஷ்பாபுவின் அப்பா வேடத்தில் நானா படேகரை நடிக்க வைக்க ராஜமவுலி விரும்பினார். புனேயிலுள்ள நானா படேகரின் பண்ணை வீட்டுக்கு சென்று அவரிடம் ராஜமவுலி கதையை சொன்னார்.

கதையை கேட்ட நானா படேகர், தனது கேரக்டர் வலுவானதாக இல்லை என்பதால் நடிக்க முடியாது என மறுத்து விட்டார். நானா படேகர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.தனது படத்துக்கு ரூ.20 கோடி வரை சம்பளமாக தருவதாக ராஜமவுலி ஆசை காட்டியும் நானா படேகர் , அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *