நடிகர் ரவி மோகன் இப்போது ‘கராத்தே பாபு’, ‘ஜெனி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர, ‘பராசக்தி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை டைரக்டு செய்ய உள்ள ரவி மோகன், அடுத்த கட்டத்துக்கு உயர உள்ளார்.
ரவி, தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார்.
அவர் தயாரிக்க இருக்கும் படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் கொண்டது. அவர் ஒரு ஹீரோ.. இன்னொரு ஹீரோவாக எஸ்,ஜே.சூர்யா நடிக்கிறார்.
இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்க உள்ளார்.
இவர் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ , ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களை இயக்கியவர் .