தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக இருப்பவர்- டி. ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட வர்.
இவர், 1983 ஆம் ஆண்டு தான் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
இந்த படத்தின் கதையை எழுதிய டி.ராஜேந்தர், படத்தில் வரும் செயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திடம் கேட்டுள்ளார். அவர் அந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவிக்காத நிலையில், தானே இந்த படத்தில் , செயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க முடிவு செய்தார்.
செயின் ஜெயபாலாக டி.ஆரே.நடித்தார்
.படம் பெரிய வெற்றி பெற்றது/
—