பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த ஒப்ப்ந்தத்தின்படி போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.

86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தையில் 64 தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதனை தெரிவித்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்,
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 14 மற்றும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று கூறினார்.

6% ஊதிய உயர்வு, சலவைப்படி 160 ரூபாயாக உயர்வு, இரவு பணிப்படி 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் குறைந்தபட்சம் 1420 முதல் அதிகபட்சம் 6460 ரூபாய் கூடுதலாக ஊதியம் பெறுவார்கள்.

4 தவணைகளில் நிலுவைத்தொகை வழங்கப்படும்.

2021 மே மாதம் முதல் இன்றுவரை ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.2,894.23 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டு உள்ளது.

பணியில் இறந்த பணியாளர்களின் 1,016 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை இன்றுவரை வழங்கியுள்ளோம்
என்றும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியில் குறிப்பிட்டார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *