தெலுங்கு இயக்குநர் சொன்ன கதையில் விஜய் நடிக்க மறுத்தது ஏன் ?

தெலுங்கு சினிமாவில் வெற்றி படங்கள் கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் கோபிசந்த் மாலினேனி.
‘க்ராக்’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் ‘ஜாட்’ படங்களை இயக்கியவர். இவருடைய படங்கள் அனைத்துமே மாஸ் கமர்ஷியல் படங்கள். தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை.

‘விஜய் 69’ படத்துக்கு இவரும் விஜய்யை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார்

ஆனால் விஜய் நடிக்க வில்லை. ஏன் ?

இது குறித்து இயக்குநர் கோபிசந்த் மாலினேனி அளித்த விளக்கம்:

. ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை முடித்துவிட்டு, கதை ஒன்றை தயார் செய்து விஜய் சாரை சந்தித்து கூறினேன். ஒரே சந்திப்பில் கதையை ஒகே செய்துவிட்டார். படம் தொடங்குவதற்கான வேலைகளை கவனித்து வந்தேன். ஆனால், விஜய் சாருடைய கடைசி படம் என்பதால், தெலுங்கு இயக்குநர் வேண்டாம் என்று பலரும் விஜயிடம் சொல்லி உள்ளனர்- அதனை ஏற்று தெலுங்கு இயக்குநர் என்பதால் என்னை வேண்டாம் என கூறிவிட்டார் விஜய்’ என்று தெரிவித்துள்ளார்,
இயக்குநர் கோபிசந்த் மாலினேனி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *