கன்னட மொழி குறித்த நடிகர் கமலின் பேச்சுக்கு கன்னட நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் திவ்யா ,’ ‘‘கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டு தான் அப்படி பேசியுள்ளார் என்று நினைக்கிறேன்.
நமது மொழிகள் ஒரே வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளன. அவர் பேசியதை மன்னிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு ஒருவர் ‘ கமல்ஹாசன் சொன்ன, அன்பு மன்னிப்பு கேட்காது என்று பதிவிட்டார்.
இதற்கு பதில் அளித்த திவ்யா, ‘‘இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அன்பில் ஈ.கோ என்ற ஒன்று இருக்கவே இருக்காது ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்க முடியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
—