கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல.
நம்ம ஊர் திரையுலகப் பிரபலங்கள் பலர், இந்த மதிப்புமிக்க புத்தகத்தில் தங்கள் பெயர்களைப் பொறித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் எஸ்.பி..பி என்று அழைக்கப்படும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
அவர் செய்த சாதனை என்ன
பத்ம விருதுகளையும் ஆறு தேசிய விருதுகளையும் வென்ற புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம், 16 மொழிகளில் 50,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இன்னொரு சாதனையும் உண்டு.
ஒரே நாளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 27 கன்னடப் பாடல்களைப் பதிவு செய்தது அடங்கும்.
அவரது இனிய குரலும் அர்ப்பணிப்பும் அவரை இந்திய இசையில் ஒரு அடையாளமாக மாற்றியது, .
—-