அசாம் கோயிலில் ஜோதிகா- சூர்யா தரிசனம் ஏன் ?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனால் படம் ஓடவில்லை.இதனால் கடும் அப்செட் ஆன சூர்யா, இப்போது தான் நடித்து முடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மீது
அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.

இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்துள்ளார்.
‘பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக
சூர்யாவும், அவர் மனைவி ஜோதிகாவும் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோவிலில்சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

—-

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *