பிரபாஸ் படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியதன் பின்ணனி.

‘கபீர்சிங்’ ‘அனிமல்’ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த சந்தீஷ் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படம் ‘ஸ்பிரிட்’.

பிரபாஸ் ,ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன், ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

‘ஸ்பிரிட்’படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டார், தீபிகா. இது – பான் இந்தியா தயாரிப்பு என்பதால், தீபிகா கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார்.

செப்டம்பர் மாதம் ‘ஷுட்டிங்’ தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்தில் இருந்து தீபிகா திடீரென விலகி விட்டார்
இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டாலும் , என்ன வேறுபாடு என தெரிவிக்கப்படவில்லை.
‘லாபத்தில் பங்கு கேட்டார்’என தீபிகா மீது ,படக்குழு தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
ஆனால் தீபிகா தரப்பில் வேறுமாதிரி கூறப்படுகிறது.

‘தொழில்முறை’ அல்லாத தேவைகள் ,இயக்குநர் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், தீபிகா ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகி கொண்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *